புது வீடு

>

இந்தப் புது வீட்டுல அந்தப் பழைய வீடுகளின் அனைத்துப் பதிவுகளும் இங்கேயும் இருக்கும். ஆனால் சிறிய அளவில்தான் இருக்கும். அதாவது "சருகு" மற்றும் "முதல்தமிழில்" பதியப்படும் பதிவின் முதல் பத்தி மட்டுமே இங்கே பதியப்படும். மற்றவை "மேலும் படிக்க..." என்ற இணைப்பைச் சொடுக்குவதன் மூலமாக அந்த முழு பதிவையும் அங்கே சென்று படிக்கலாம்.

பெரும்பாலான பதிவுகள் அந்தப் பழைய வ.பதிவுகளிள்தான் இடம் பெறும். ஆனால் ஒரு சில பதிவுகள் இங்கேயே இடம் பெற்று விடும். அதனால் வாசகர்கள் எரிச்சல் அடைய வேண்டாம்.

தமிழ்மணத்தில் திரட்டமுடியாத "ப்ளாக்கர் பீட்டா" பதிவுகள்:

http://tamilbasic.blogspot.com - முதல்தமிழ்
இது ஒரு "தமிழ்இணைய தொழில்நுட்ட்பப்" பதிவு.

http://sarugu.blogspot.com - சருகு
இதைச் "சமூகம் மற்றும் பொதுவானவைகள்" என வகைப்படுத்தலாம்.

எதற்காக இவ்வலைப்பதிவு?

>

அண்மையில் ப்ளாக்கர் தளம் "ப்ளாக்கர் பீட்டா" கொடுத்து தனது சேவையை மேம்படுதிக் கொண்டதை தமிழ் வலைப்பதிவர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதனால் அதிகம் பாதிக்கப் பட்டது இந்த தமிழ் வலைப்பதிவர்கள் தான்.

அவர்களின் அடைப்பலகைகள் (Templates) சின்னா பின்னமாகி சிதைந்து விட்டது. அவ்வாறு பாதிக்கப் பட்டதில் நானும் ஒருவன். ஆனால் நான் அடைப்பலகையில் சில மாற்றங்கள் செய்ததன் மூலமாக சரி செய்து விட்டேன். அதன் பிறகும் ஒரு பிரச்சனை இருந்தது. என்னவேன்றால் "ப்ளாக்கர் பீட்டா" வில் உள்ள வலைப்பதிகளில் புதிதாக எந்தப் பதிவு கொடுத்தாலும் அதை தமிழ்மணத்தில் திரட்ட முடியவில்லை.

தமிழ்மணத்தில பிழைச்செய்தி வந்தது. ஆனால் நான் இன்னும் அந்த "ப்ளாக்கர் பீட்டா" வின் "Customise" என்ற option-ஐப் பயன்படுத்தி அதில் மற்றங்கள் செய்வதில்லை.

இதன் காரணமாகவே அங்கே பதியப் படும் புதிய பதிவுகளை தமிழ்மணத்தில் திரட்டுவதற்காக இந்த புதிய வலைப்பதிவை பயன்படுத்த உள்ளேன். குடியிருந்த வீட்ட விட்டு வரமுடியவில்லை அதுதான் காரணம்.

தமிழ்மணத்தில் திரட்டமுடியாத "ப்ளாக்கர் பீட்டா" பதிவுகள்:

http://tamilbasic.blogspot.com - முதல்தமிழ்
இது ஒரு "தமிழ்இணைய தொழில்நுட்ட்பப்" பதிவு.

http://sarugu.blogspot.com - சருகு
இதைச் "சமூகம் மற்றும் பொதுவானவைகள்" என வகைப்படுத்தலாம்.

தமிழே முழு முதல் மொழி

>

தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் இந்த புதிய வலைப் பதிவு மூலமாக வணக்கத்தைத் தெரிவித்துக்க் கொள்கிறேன். இந்த புதிய http://tamilone.blogspot.com மூலமாக மீண்டும் இணையத்திற்கு எனது ஆக்கங்களை தருவதில் மட்டுமல்லாமல் அதைத் தமிழில் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். வலைப்பதிவர்கள் இவ்வலைப்பதிவிற்கு அடிக்கடி வருகை தர வேண்டுகிறேன்.